இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை ஏமாற்றிய ரோகித் சர்மா !

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.மும்பை அணி ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது.பின்னர் டிகாக் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணி வீரர் சாகர் வீசிய 6-வது ஒவரின் 2-வது பந்தில் 15 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தற்போது வரை மும்பை அணி 10.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 70 ரன்கள் அடித்துள்ளது. மும்பை அணியின் வீரர்களான சூரியகுமார்  8* ரன்கள் மற்றும் கிஷன் 15* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Leave a Comment