அமெரிக்க பூங்காவில் கொள்ளை முயற்சி..! 2 இந்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் சுடப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்கா : சிகாகோவின் பிரின்ஸ்டன் பூங்காவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், 2 இந்திய மாணவர்களை துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 23 வயது இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் மற்றொரு மாணவர் காயமடைந்துள்ளர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த தேவன்ஷ் என்றும் காயமடைந்த மாணவர் தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கொப்பலா சாய் சரண் என்றும் அடையாளம் காவல்துறையினரால் காணப்பட்டுள்ளார். காயமடைந்த சாய் சரண், ஓக் லானில் உள்ள கிறிஸ்ட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், “மாணவர்கள் இருவரும் பிரின்ஸ்டன் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது கையில் துப்பாக்கியுடன் அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களிடத்தில் உள்ள பணம் மற்றும் பொருட்களை தருமாறு மிரட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலுக்கு இணங்க தங்களிடம் உள்ள பொருட்களை கொடுத்த போதிலும் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment