போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து…!!! ஐ.பி.எல் தமிழ் வர்ணனையாளர்…!!! பணியை துறந்த ஆர்.ஜே.பாலாஜி…!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெலிவிஷன் தமிழ் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தின் போது கருப்பு சட்டை அணிந்து வர்ணனை பணியை கவனித்து வந்த நிலையில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது வர்ணனையாளர் பணிக்கு அவர் வரவில்லை.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில், இன்றைய (நேற்று) ஆட்டத்தில் வர்ணனையாளர் பணியை நான் செய்யவில்லை. ஒரு தமிழனாக எனது பங்களிப்பு இது.எனது உணர்வையும், என்னுடைய மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு நன்றி’ என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment