அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.இந்த கூட்டத்தில்  கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சர்கள் தங்கமணி,செல்லூர் ராஜு ,அன்பழகன் ஆகியோர் பங்கேற்கவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.