‘எந்த வகையில் பதிலடி கொடுத்தாலும் துணை நிற்போம்’ – நடிகர் சங்கம் அறிக்கை!!

காஷ்மீர், பல்வாமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அவர்களுக்காக நாடே வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத கும்பல் பொறுப்பேற்றுக்கொண்டதால், பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக ஓர் அறிக்கை ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில்’ காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நெஞ்சை பதறவைக்கிறது. அவர்களுக்கு வீரவணக்கங்களை செலுத்தி , அவர்கள் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் கூறிக்கொள்கிறோம்.

மேலும், இந்த தாக்குதலுக்கு நாடு எந்த வகையில் பதிலடி கொடுத்தாலும் இந்திய மக்களுடன் சேர்ந்து நடிகர் சங்கமும் உடன் இருப்போம். என தேச பக்தி உடன் தெரிவித்து கொள்கிறோம்.’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment