திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் – ₹ 1.41 கோடி அபராதம்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபட்ட 10 நாட்களில், சென்னையில் ₹.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அக்டோபர் 26 தேதி அமல்படுத்தபட்டது. சென்னையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 10 நாட்களில், 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் 50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Aravinth Paraman

Leave a Comment