சத்துணவு ஊழியர்கள் ஒய்வு வயது 60-ஆக நீட்டிப்பு…! முதல்வர் அறிவிப்பு…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், அரசுப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.