தனது 2 மகன்களை துப்பாக்கியால் சுட்ட ஒய்வு பெற்ற காவலர்…! ஒருவர் உயிரிழப்பு…!

  • தனது 2 மகன்களை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர்.
  • துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்த போலீசார்.

மும்பையில் 68 வயதான ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் பகவான் பாட்டீல் என்பவர், அய்ரோலியில் உள்ள வீட்டில் துப்பாயைக்கியை கொண்டு, விஜய், சுஜய் என்ற அவரது இரண்டு மகன்களை சுட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மூன்று புல்லட் காயங்களுக்கு ஆளான விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது தம்பி சுஜய்  சிறு காயங்களுக்கு ஆளானார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கார் காப்பீடு செலுத்துவது தொடர்பான வாக்குவாதத்தைத் தொடர்ந்து பகவான் பாட்டீல் தனது மகன்களை நோக்கி சுட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் பகவானிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.