கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா தகுதியானவரா.? கபில் தேவ் கேள்வி.!

கேப்டன் ரோஹித் சர்மா உடற்தகுதி பற்றி ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். 

தற்போது இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்சி குறித்தும், உடல் தகுதி குறித்தும் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார் .

அவர் கூறுகையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உண்மையில் தகுதியானவர்தானா.? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், ஒரு அணியின் கேப்டன் என்றால் அவர் மற்ற வீரர்களின் உடற்தகுதியினை ஊக்குவிக்கும் வகையில் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அணி வீரர்கள் தங்கள் அணியின் கேப்டன் உடற்தகுதி பற்றி பெருமைப்பட வேண்டும். எனவும் கபில் தேவ் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment