என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஓய்வு பெற்ற டிஎஸ்பி தன்னைத் தானே சுட்டு தற்கொலை.!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்ட் சந்திரா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாட்னாவில் மொகாமாவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருந்தவர் கே. சந்திரா. 68 வயதான இவர் 2012ல் ஓய்வு பெற்றார்.கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டான (டிஎஸ்பி) இவர் மித்ரமண்டல காலனியில் உள்ள கோயிலில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இது குறித்து டிஎஸ்பி புல்வாரிஷரிப், சஞ்சய் குமார் பாண்டே ஆகியோர் விசாரணை நடத்திய போது மூன்று பக்க தற்கொலை குறிப்பை கண்டெடுத்துள்ளனர். அதில் அவர் குடியிருக்கும் பகுதியில் நீர்வழங்கல் மற்றும் குப்பைகளை சேகரிப்பதில் அவர் விரக்தியில் இருந்துள்ளார். குப்பை மற்றும் கட்டுமான பொருட்களை வெளியே சாலையில் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கொட்டி நீர்வீழ்ச்சியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சந்திராவின் மகன் மற்றும் வக்கீலான நிசாய் ஸ்ரேஸ்தா கூறியதாவது, தனது தந்தை தங்கள்வீட்டிற்கு வெளியே தொடர்ந்து குப்பைகளை கொட்டி நீரில் மூழ்கியதால் மிகுந்த வருத்தமும், விரக்தியும் அடைந்தார். தடுக்கப்பட்ட வடிகால்களின் விளைவாக அப்பகுதி தாழ்வான இருப்பிடமாக இருந்தது. அவர் அண்டை வீட்டாரை அழைத்து பேசியும் பயனில்லை. எனவே இந்த பிரச்சினையை தீர்க்க எதுவும் செய்ய இயலவில்லை என்ற விரக்தியில் இருந்ததாக கூறினார். செவ்வாய்க்கிழமை தனது தந்தை வராந்தவில் உட்கார்ந்து நோட்புக் ஒன்றில் எதோ எழுதுவதை கண்டதாகவும், ஆனால் நாங்கள் அதை புரிந்து கொள்வதற்கு முன்பு அவர் தன்னுடைய அறைக்கு சென்று துப்பாக்கியை எடுத்து கோவிலில் சென்று சுட்டு கொண்டதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 16 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அதற்கான மருந்துகளை எடுத்து வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.