ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு சற்று நேரத்தில் தொடங்கவுள்ள முன்பதிவு.!

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டது தான் சிறப்பு ரயில்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த 200 ரயில்களில் தமிழகத்திற்கு எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

author avatar
Dinasuvadu desk