இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக   ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஆனாலும் இஸ்ரோவின் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினரை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.மேலும்  இஸ்ரோ மேற்கொள்ளவுள்ள பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்து சிவன் எடுத்துரைத்தார்.