கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம்! WHO அதிரடி முடிவு!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்திற்கு அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பல்வேறு மருந்துகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.அந்த ஆய்வில் ரெம்டெசிவிர் மருந்தை உபயோகித்ததால், நோயாளிகளின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கோ, உயிரிழப்புகளை கட்டுப்படுத்தியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

இதனையடுத்து, இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்த்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளதாகவும், மேலும், இந்த மருந்து நோயாளிகளுக்கு சிறிதளவு நன்மை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பல மருத்துவ நிபுணர்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

6 mins ago

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…

16 mins ago

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

1 hour ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

1 hour ago

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

2 hours ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

2 hours ago