ரெமோ படத்தை அடுத்து கார்த்தியை இயக்க உள்ளார் பாக்யராஜ் கண்ணன்!!!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரெமோ. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கதாநாயகியே இல்லாத ஆக்ஷ்ன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடைபெற்று பிப்ரவரி இறுதியில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் கதையாக உருவாக உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment