புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது..! தினகரன்

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் உள்ளிக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் நிவாரணப் பொருட்களை வழங்கினார் .அதன் பின் அவர் கூறுகையில், மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ 5,000 கோடி வழங்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது . தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்..

Leave a Comment