தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கின் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதி அதிகாலையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டது.
அதன் படி தற்பொழுது தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் முழு ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்படுமா அல்லது தளர்வுகள் இல்லாமல் மேலும் முழு ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…