புகையிலை வாங்கி வர மறுப்பு.. பேத்தியை கோடரியால் கொன்று தாத்தா.. உடலை மறைத்து வைத்த கொடூரம்..
புகையிலை வாங்கி வர மறுப்பு.. பேத்தியை கோடரியால் கொன்று தாத்தா.. உடலை மறைத்து வைத்த கொடூரம்..
ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது..
மத்திய பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது 8 வயது பேத்தியை கோடரியால் கொன்று அவரது உடலை மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் உள்ள தீவனக் குவியலில் புதைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், அருகில் உள்ள கடைக்கு சென்று புகையிலை வாங்கி வருமாறு, பல முறை கூறியும் பேத்தி மறுத்ததால், இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று எஸ்பி கூறினார்.
மேலும், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்த முதியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.