முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு…!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில், தன்னிடம் பணம் பறிக்க முயன்ற போது அதற்கு இணங்காததால், நடிகை தனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதால் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, வழக்கில் அடையாறு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், நடிகை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan