வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாத காரணத்தால் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் விளக்கம்!

தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் , கடலூர், ஈரோட்டில் தலா ஒரு வாக்குச்சாவடி என தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்ஆணைய தலைமை அதிகாரி நேற்று அறிவித்திருந்தார்.

இதற்க்கு தற்போது தேர்தல் தலைமை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ; தேர்தல் நாளில் தர்மபுரியில் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களுடன் இருந்தது கண்டறியப்பட்டதாலும், இதனால் வாக்காளர்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு, மேலும், திருவள்ளூரில் பூந்தமல்லி வாக்குச்சாவடியில், மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததாலும் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment