#RedAlert : நெருங்கும் நிவர் புயல்! தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்!

நிவர் புயல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று நள்ளிரவு அல்லது நாள் அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்காடுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த புயலானது தற்போது கடலூருக்கு 180 கி.மீ, புதுச்சேரிக்கு 190 கி.மீ, சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மைய ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.