ரெட் அலர்ட் வாபஸ்..!கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் திறப்பு..!

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்து இருந்தது. குறிப்பாக நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு  என அறிவித்து இருந்தது.
இதனால்  நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில்  ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பபெற்றது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

author avatar
murugan