இந்தியாவில் விரைவில் அங்கீகாரம் – இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வந்தது. இந்நிலையில் பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் இன்று மற்றும் நாளை இந்த கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் அடுத்த சில நாட்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனகா தயாரிப்பில் உருவாகிய தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என அரசின் உயர் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மூத்த அதிகாரி ஒருவர், சீரம் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக தெரிவதாகவும், இங்கிலாந்து மற்றும் பிரேசில் மருத்துவ பரிசோதனைகளிலும் அதே தரவை நிறுவனம் சமர்ப்பித்து உள்ளதால், தொடர்ந்து மதிப்பாய்வு நடைபெற்று வருவதாகவும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த தடுப்பூசி இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் என தாங்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்பு ஒழுங்குமுறை நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்- பர்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மூலம் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பரிசீலித்து வருவதால் இங்கிலாந்திலும் அவசரகால பயன்பாட்டிற்கு இது அங்கீகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

6 mins ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

2 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

3 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

3 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

3 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

4 hours ago