கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என கூறுவது காலதாமதத்திற்கு வழி வகுத்துவிடும். தேமுதிக பொறுத்தளவில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளது.
சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். நான் ஒரு பெண் என்பதால் சசிகலாவை ஆதரிக்கிறேன். சசியாகலாவால் பலன் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் என கூறுவது வருத்தம் அளிக்கிறது.
சசிகலாவால் தான் அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள். ஆகையால், கூட்டணிக்கு தலைமை வகிப்பவர்கள் காலதாமதமின்றி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். யாருக்கு எவ்வளவு தொகுதி என்று கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…