இந்திய, சீன இடையே சமரசம் செய்ய தயார் – அதிபர் டிரம்ப் ட்வீட்.!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லடாக் எல்லைப்பகுதியில் சீனா படைகளை குவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை சீன ராணுவம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியா, சீன ராணுவத்தை விட அதிக வீரர்களை குவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்