வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.!

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகக் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 72.8% வாக்குகள் பதிவானது. வேளச்சேரி தொகுதியில் தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் இன்று  வாக்கிப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மறுவாக்குப்பதி நடைபெறுகிறது.

author avatar
murugan