கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.. கம்பிர் அதிரடி கருத்து!

பெங்களூர் அணியின் கேப்டன் பதிவில் இருந்து கோலியை நீக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீர்ர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை எனவும் விமர்சனங்கள் குவியத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை விலக்க வேண்டுமா என கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எட்டு ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக அவர் கோப்பையை வெல்லாமல் இருப்பதாகவும், கோலிக்கு அதிக நேரம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அவரை கேப்டன் கேப்டன் பதிவில் இருந்து நீக்கவேண்டும் என பதிலளித்துள்ளார்.