பஞ்சாபை பறக்கவிட்ட பெங்களூர்!! அசத்திய ஈளம் பந்துவீச்சாளர்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அற்புதமாக ஆடி 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் படேல் 24 பந்துகளுக்கு 43 ரன்களும் ஏ பி டி வில்லியர்ஸ் 44 பந்துகளுக்கு  82 ரன்களும் மார்கஸ் ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் விளாச 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 202 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் 203 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் அற்புதமாக ஆடினார்கள் லோகேஷ் ராகுல் 42 ரன்களும் கிறிஸ் கெயில் 23 ரன்களிலும் மயாங்க் அகர்வால் 35 ரன்களும் நிக்கோலஸ் பூரான் 46 ரன்களும் விளாசினர். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் இளம் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

author avatar
Srimahath

Leave a Comment