பணவரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பயனர்கே!Debit மற்றும் Credit card புதிய விதிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக  புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.அவ்விதிமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும் என்றும் வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியில் அனுமதியைப் பெற வேண்டும்.

பணம்பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் புதிய சேவைகளை தேர்வு செய்வது அல்லது விலகுவது ஆன்லைன் பரிவர்த்தனைகள் ‘
சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரன்புகள் போன்றவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha