இனி மரணத்தண்டனை உறுதி !பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை…

அரியானா மாநிலச் சட்டமன்றத்தில் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டுள்ளது.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதைக் கொடிய குற்றமாகக் கருதி அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கச் செய்யும் சட்டம் ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியானா சட்டமன்றத்தில் நேற்று இதற்கான மசோதாவை அமைச்சர் ராம் விலாஸ் சர்மா கொண்டுவந்தார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கிரண் சவுத்ரி பாதிக்கப்படுபவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளாமல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனினும் அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. முந்தைய வடிவிலேயே சட்டமசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment