ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள் பறிமுதல் ..! ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் குழு மீண்டும் அதிரடி ..!

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் செய்து பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான பல்வேறு  இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் பழமையான 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு உள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Leave a Comment