சிரிச்சிட்டே பேசி காயப்படுத்துறாங்க ரம்யா.!இந்த வார நாமினேஷனில் தேர்வான போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனுக்கு சனம்,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில்,ஆரி அவர்களை ரம்யா அவருடைய கோவம் மற்றவர்களை பயமுறுத்துவதாக இருப்பதாக கூறி நாமினேட் செய்கிறார் .அதே போன்று ஆரியை பாலாஜியும், ஷிவானியும் நாமினேட் செய்துள்ளார்.

மேலும் ரியோ,நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்துள்ளனர் . ஏனெனில் அவர் சிரிச்சிட்டே பேசி மற்றவர்களல காயப்படுத்துவதாக ஜித்தன் ரமேஷ் காரணம் கூறியுள்ளார் .அதே போன்று அர்ச்சனா சனம் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்துள்ளார்.மேலும் ஷிவானியை ஆரி, ஆஜித் மற்றும் கேபி ஆகியோரும் நாமினேட் செய்துள்ளனர்.ஏனெனில் ஷிவானி பாலாஜியின் நிழலாக இருப்பதாக தெரிகிறது என்று அர்ச்சனா காரணம் கூறியுள்ளார்.இதிலிருந்து இந்த வார நாமினேஷனுக்கு சனம்,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்று தெரிகிறது .