ராமர் கோவில்.. எனது கனவு நிறைவேறியது – அத்வானி பேச்சு.!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு நாளை பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

கொரோனா காரணமாக இந்த விழாவின் அழைப்பாளர் எண்ணிக்கையை 200-ல் இருந்து 170-ஆக குறைக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்  காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள்  எனவும்,ராமர் கோயில் அமைப்பதற்காக தியாகங்கள் மேற்கொண்டு அனைவரையும், நன்றியுடன் நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan