சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் டெல்லி புறப்பட்ட ராம்நாத் கோவிந்த்..!

5 நாள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் குடியரசுத் தலைவர் டெல்லி புறப்பட்டார்.

சென்னையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர், உதகைக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். சூலூரில் இருந்து விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.

author avatar
murugan