சக நடிகர் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார்! – ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

தடையற தாக்க படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கு முன்னணி ஹீரோயினாக வலம் வர தொடங்கினர். அதற்கடுத்து தமிழில் தீரன், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
இவர் அண்மையில், ஒரு பேட்டியில், ‘ ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது  உடன் நடித்த சக நடிகர் என்னிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக பேசி வந்தார். அவர் சொல்ல வருவது நன்றாக இருந்தது. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அதனை தவிர்த்துவிட்டேன். பிறகு எனது தோழியுடன் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் ‘ என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.