கட்சி பற்றிய அனைத்தையும் ரஜினி தான் சொல்வார் – தமிழருவி மணியன்

ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின்செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்றும், கட்சி தொடர்பான அனைத்து செய்திகளும் ரஜினிகாந்த் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காந்திய மக்கள் இயக்கத்தை, ரஜினிகாந்த் அவர்கள், கட்சியை தொடங்கும் போது, அதனோடு இணைக்க முடிவு செய்துள்ளோம். ஆன்மீக அரசியல் என்பது மத அரசியல் அல்ல. ஆன்மீக அரசியல் என்பது அனைத்து மதத்திற்கானது. அணைத்து மக்களையும் அன்பால் அரவணைத்து செல்வது தான் ஆன்மீக அரசியல். ரஜினிகாந்த் அனைத்து மக்களுக்குமான ஆன்மீக அரசியலை செய்வார். ஆன்மீக அரசியலை முதலில் சொன்னவர் மஹாத்மா காந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.