ரஜினியின் மற்றொரு முகம் இதோ….

ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி எழுப்பிவந்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் அரசியலுக்கு வருவேன் என்று பதில் அளித்தபின்னர் அவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார் ஒக்கி புயல் முதல் உஷா ,அஷ்வினி படுகொலை வரை அவர் மௌனம் களைய வில்லை .ரசிகர்களை பார்ப்பது அடுத்த கட்ட அரசியல் பற்றி பேசுவது சிலையை திறந்து வைப்பது என அரசியல் வேலையாக செய்து வருகிறார்.

இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் ரஜினிகாந்திடம், சமீபத்தில் அரங்கேறிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளை பற்றி கேள்விகளுக்கு அவர் உஷா மற்றும் அஷ்வினி படுகொலை குறித்து கருத்து கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல் மௌனமாக சென்றார்.

ரஜினியின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாகவும் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று சமுக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் ரஜினி.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment