குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் காத்திருந்துள்ளது. பல்வேறு முயற்சி செய்து முதலையை மீட்க முயன்ற போதிலும், முதலை தலையில் அடிபட்டதால், அது இறந்துவிட்டது. வனவிலங்கு ஆர்வலர் ஹேமந்த் வத்வானா தெரிவித்துள்ளதாவது, அதிகாலை 3:15 மணியளவில் கர்ஜன் ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளரிடம் இருந்து ஒரு முதலை கிடப்பதாக எனக்கு தகவல் வந்தது.
ஆனால், அந்த இடம் நடுவில் அமைந்திருப்பதால் விரைவாக அங்கு செல்வது கடினமான விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், எங்களது வாகனம் கர்ஜன் ரயில் நிலையத்தை அடைந்த பிறகு, ரயில்வே அதிகாரிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இறந்த முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…