#RRvPBKS: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் பஞ்சாப்!

#RRvPBKS: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் பஞ்சாப்!

Default Image

ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள நான்காம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

பஞ்சாப் கிங்ஸ்:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மனன் வோஹ்ரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சிவம் டியூப், ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்.

Join our channel google news Youtube