துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் -ஆளுநர் ஒப்புதல்

துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை  நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ராஜஸ்தானில் காங்கிராஸ் அரசை தக்க வைக்க முதலமைச்சர் அசோக் கெலாட்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது .ஆனால் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.

இதனால் இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மேலும் அவரை துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் அவருடன் இருக்கும் விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

எனவே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra )-வை நேரில் சந்தித்து சச்சின் பைலட் ,விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா நீக்கம் குறித்து தெரிவித்தார் .இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.