ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் பேருந்து விபத்து – 3 பேர் பலி ; 24 பேர் காயம்!

ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

author avatar
Rebekal