#RainAlert:தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு!

#RainAlert:தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த போதிலும்,கடந்த சில நாட்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் சற்று குளிர்ச்சி தரும் வகையில் பல பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில்,தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி,தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய ஐந்துமாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rain

Join our channel google news Youtube