IPL 2020: பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் சின்ன தல ரெய்னா!

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்திற்காக இன்று சென்னை வந்தார், அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா.

அவருக்கு விமான நிலையத்தில் ஊழியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், இந்த பயிற்சியாட்டம் நாளை சேபாக் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே பயிற்சியாட்டம் நடைபெறும் என சென்னை அணி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தல தோனியும் இன்று பயிற்சிக்கு சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.