#Alert:மேற்குதிசை காற்று மாறுபாடு;தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் மழை – வானிலை மையம் அறிவிப்பு!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TNRainUpdate

மேலும்,ஜூலை 5,6 ஆகிய தேதிகளில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும்,இன்று முதல் நான்கு நாட்களுக்கு குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா,இலட்சத்தீவு பகுதி,கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு,மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள்,வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.எனவே,மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment