இன்றும் நாளையும் தமிழகத்திற்கு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 480 கிமீ தொலைவில் நிலைகொண்டிருப்பதால், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்து, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி கடல் நோக்கி செல்வதால், நாளை மறுநாள் தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை , திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் (கிறிஸ்துமஸ் தினம்) கனமழை பெய்யும் எனவும்,

அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 26இல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை , திருவாரூர், நாகை  உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரி நோக்கி நகர்ந்து செல்வதால், தென்தமிழக கடற்கரை மீனவர்கள், குமரி, மன்னார் வளைகுடா மீனவர்கள் இன்று முதல் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரையில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment