பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை -ரயில்வே அமைச்சகம்…!

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசிய போது “மகாத்மா காந்தி 150- வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில் ஒருமுறை மட்டுமே  பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இதை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அறிவித்து உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

author avatar
murugan