#Job Alert : ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பிற்கான முக்கிய அறிவிப்புகள்

இந்த ஆண்டிற்கான  பல துறைகளுக்கான  ஆட்சேர்ப்பு பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம்.Railways, Indian Army, CISF

2020-ஆம் ஆண்டிற்கான ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பின்  ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. எஸ்.எஸ்.பி(SSB ) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு :

பல்வேறு துறைகளில் உள்ள  மொத்தம் 1522 கான்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 27 -க்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2. உச்சநீதிமன்ற கட்டிட மேற்பார்வையாளர் ( Supervisor) ஆட்சேர்ப்பு :

உச்சநீதிமன்றத்தின் கட்டிட மேற்பார்வையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 29 ஆகும்.

3. அமைச்சரவை செயலக கள உதவியாளருக்கான ஆட்சேர்ப்பு:

12 கள உதவியாளர் பதவிக்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 31 -ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

கள உதவியாளர் 12 பதவிகளை ஆட்சேர்ப்பு செய்ய தகுதியான இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது . இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆகஸ்ட் 31 க்கு முன் விண்ணப்பிக்கலாம்.

4. இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு :

சோல்ஜர் டி. பார்மா மற்றும் சோல்ஜர் நர்சிங் உதவியாளர் மற்றும் நர்சிங் உதவி கால்நடை மருத்துவர் பதவிகளுக்கு இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை  செப்டம்பர் 29 -க்கு முன் சமர்ப்பிக்க என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

5. சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் / டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு:

மேற்கண்ட பதவிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 6, 2020 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சிஐஎஸ்எப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

6. ராஜஸ்தான் தபால் வட்டதிற்கான ஜி.டி.எஸ் ஆட்சேர்ப்பு :

ராஜஸ்தான் தபால் வட்டத்தின் ஜி.டி.எஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு இந்திய தபால் துறையால் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக மட்டுமே இணைப்பு செயல்படுத்தப்பட்டதால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7. எஸ்.சி.ஆர் ஆட்சேர்ப்பு :

தென்கிழக்கு ரயில்வே 432 பதவிகளை அப்ரண்டிஸ் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை  நிரப்ப முயல்கிறது. ஆர்வமுள்ளவர்கள் 2020 ஆகஸ்ட் 20 இல் விண்ணப்பிக்க வேண்டும்.

8. தேசிய வீட்டுவசதி வங்கி சிறப்பு அதிகாரி ஆட்சேர்ப்பு :

என்.எச்.பி சிறப்பு அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 28 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

author avatar
Castro Murugan