ராகுல்காந்தியை போல் ஒரு இளைஞர் தலைவராக வர வேண்டும் – பஞ்சாப் முதல்வர்!

ராகுல்காந்தியை போல் ஒரு இளைஞர் தலைவராக வர வேண்டும் – பஞ்சாப் முதல்வர்!

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தியை போன்று ஒரு இளைஞர் தேச தலைவராக மீண்டும் வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று தன் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். அவரது ராஜினாமாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் அலுவல் காரிய கமிட்டிற்கு அனுப்பினார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை குடுத்து விட்டதால் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே, காங்கிரஸ் மேலிடம் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை எந்தவித தாமதமும் இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தன் டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த மீண்டும் ராகுலை போல ஒரு இளைஞர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் மேலிடம் இளைஞர்களை ஈர்க்க இளைய தலைமுறை தலைவர்களை தேர்வு செய்ய வேண்டு என்றும் கேட்டுள்ளார்.

Join our channel google news Youtube