அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி 3வது நாளாக ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 3வது நாளாக விசாரணை.

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக ஆஜராகியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து, 3வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment