திடீரென கடலுக்குள் குதித்த ராகுல் காந்தி…! ஒரேயொரு மீன் தான் கிடைத்தது…!

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

கேரளாவின் வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும். இங்கு அவர் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா சென்றுள்ளார். எங்கு சென்றாலும் மக்களோடு மக்களாய் இயல்பான முறையில் பழகும் இவரது குணம் மக்களை கவர்ந்து இழுக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல்காந்தி மீனவர்களுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றுள்ளார்.

அப்போது மீனவர்கள் படகில் பயணம் செய்த போது கடலில் வைத்து சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்து சாப்பிட்டுள்ளார். பின் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி திடீரென தனது சட்டையை கழட்டிவிட்டு கடலில் குதித்துள்ளார். இதனால் உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சற்று பதற்றம் அடைந்தனர். ஆனால் கடலில் குதித்த ராகுல்காந்தி சில நிமிடங்கள் கடலில் நீந்தி, பின் படகில் ஏறினார்.

இதுகுறித்து படகின் உரிமையாளர் கூறுகையில், ராகுல்காந்தி கடலில் எங்களுடன் சுமார் 3 மணி நேரம் செலவழித்தார். இதற்காக இன்று காலை 4:00 மணிக்கு அவர் கடற்கரையில் தயாராக இருந்தார். நாங்கள் சமைத்து கொடுத்த மீனையும் ருசித்து சாப்பிட்டார்.  எங்களுடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சகஜமான முறையில் பழகினார் என் அதெரிவித்தார்.

ராகுல் காந்தி கடலுக்கு சென்ற அனுபவம் குறித்து கூறுகையில், ‘மீனவர்கள் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டேன். அதனால், இன்று காலை எனது சகோதரர்களுடன் கடலுக்கு சென்றேன். கடலுக்கு சென்ற படகில்  மீண்டும் கரைக்கு திரும்பும் வரை ஒட்டுமொத்தமான கஷ்டமான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடலில் சென்று வலைவிரித்து மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சிலர் பயனடைகிறார்கள். நாங்கள் மீன்பிடிக்க விரும்பினாம். அனால், ஒரேயொரு மீன் தான் கிடைத்தது. முதலீடு செய்தும், வலை  காலியாகவே இருந்தது. இது தான் என்னுடைய அனுபவம் என தெரிவித்தார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..!

ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி…

1 hour ago

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில்…

3 hours ago

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

4 hours ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

4 hours ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

4 hours ago

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது… உச்சநீதிமன்றம்!

Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்…

5 hours ago