ஹரியானவுக்கு டிராக்டர் ஒட்டி சென்ற ராகுல் காந்தி

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார். 

 அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த  சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனேவ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.

இந்நிலையில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு  தெரிவித்து பஞ்சாப்பில் இருந்து டிராக்டர் மூலம் ஹரியானா மாநிலத்திற்குள் பேரணியாக காங்கிரஸ் கட்சியினர் சென்றனர்.அப்பொழுது பேரணியில் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்.ஆனால்    ஹரியானா மாநிலத்திற்குள் பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.